கலஹாவை முஸ்லிம்கள் ஆக்கிரமித்துள்ளனர் - பொதுபலசேனாவின் குற்றச்சாட்டு
Thursday, May 29, 20141comments
கண்டி - கலஹா, திக்கன பத்தன கிராமத்தை முஸ்லிம்கள் முழுமையாக ஆக்கிரமித்துள்ளதாக பொதுபல சேனா அமைப்பினர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.
பொதுபலசேனா அமைப்பின் கல்வி மற்றும் ஆய்வுப்பிரிவின் தலைவர் சமில லியனகே எழுதிய இந்தப்புத்தகத்திலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கண்டி, கலஹா திக்ஹின்ன பத்தன எனும் இடத்தில் 1960ஆம் ஆண்டு காலப்பகுதியில் தெய்யங் பாய் என்று ஒரே ஒரு முஸ்லிமே இருந்தார். அந்தக் காலத்தில் தேர்தலில் போட்டியிட்ட இரு சிங்களவர்களில் ஒருவரை இந்த தெய்யங் பாய் ஆதரித்தார். உதவிகள் வழங்கினார். அவர் ஆதரித்த அரசியல்வாதி வெற்றி பெற்றதால் தெய்யங் பாய்க்கு அந்தக் கிராமம் பரிசாக வழங்கப்பட்டது. தற்போது அவரின் குடும்பத்தினர் சிங்களவர்களின் காணிகளை அபகரித்துக் கொண்டுள்ளனர்.
2012ஆம் ஆண்டு ஜூன் 26ஆம் திகதி கொழும்பு டெலிகிராப் எனும் பத்திரிகையில் ஜோசப் ஹெமன்ட் என்பவர் இவ்வாறு எழுததையே இப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

+ comments + 1 comments
gyuuj
Post a Comment